
சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் வரும் 27–ம் தேதி முதல் நவம்பர் 2–ம் தேதி வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
கடந்த சீசனின் வெற்றியாளரான செக் குடியரசின் 20 வயதான லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவுக்கு போட்டித் தரவரிசையில் முதலிடமும், இரண்டு குழந்தைகளின் தாயான ஜெர்மனியின் தாட்ஜானா மரியாவுக்கு 2-வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

