சென்னை: சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் ரூ.8 ஆயிரம் கோடியில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.
தென்னிந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் இந்திய மல்டி மாடல் போக்குவரத்து ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் தென்னிந்திய கப்பல் போக்குவரத்து 6-வது மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. சென்னை துறைமுகத்தின் தலைவர் சுனில் பாலிவால் மாநாட்டை தொடங்கி வைத்து, ‘மாநில தளவாடங்களின் நிலை மற்றும் துறை ரீதியான டிஜிட்டல் மாற்றம்’ குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: