சாத்தூர்: சென்னை மாநகராட்சி முழுவதும் போலி வாக்காளர்களால் மட்டுமே திமுக வெற்றி பெறுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் இன்று சாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசியது: “திமுக ஆட்சி பொறுப்பேற்று 50 மாதங்களை கடந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் சொல்லி கொள்ளும் அளவுக்கு உருப்படியான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் தமிழகம் வளர்ந்துவிட்டது என்பது போன்ற தோற்றத்தை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் உருவாக்குகிறார்கள்.