By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: சோறு கொடுத்த சிறுவன்!
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • தலைப்பு செய்திகள்
  • யூடியூப் சேனல்கள்
  • செய்தி பிரிவுகள்
  • நியூஸ் பேப்பர்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » சோறு கொடுத்த சிறுவன்!
கட்டுரைதமிழ்நாடு

சோறு கொடுத்த சிறுவன்!

EDITOR
Last updated: January 1, 2025 8:27 pm
By EDITOR
2 Min Read
Share
SHARE

KAMARAJ

 

இன்னைக்கு பள்ளிக்கூடத்தில் சத்துணவு போடுறாங்க இல்லையா? அப்படிப் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு போடுறதுக்கு வித்திட்டது யார் தெரியுமா? காமராஜர். இவர் தமிழக முதல்வராக இருந்தப்பதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாரு. ஏழையாக இருந்த சின்னப் பசங்க எல்லாம் படிப்பதற்குப் பதிலா குடும்பக் கஷ்டம் காரணமாக வேலைக்குப் போனாங்க. அப்படிச் சின்னப் பசங்க வேலைக்குப் போகாம இருக்குறதுக்காக இந்தத் திட்டத்தை 1955-ம் வருஷத்துல கொண்டு வந்தாரு. இந்தத் திட்டத்தைக் கொண்டுவரச் சின்ன வயசில நடந்த ஒரு சம்பவம்கூட காரணம்னு சொல்லலாம்.

விருதுநகர்ல இருக்குற ஒரு பள்ளிக்கூடத்துல காமராஜர் 4-ம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தாரு. அந்தப் பள்ளிக்கூடம் அவரோட வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்துச்சி. அதனால மத்தியானத்துல சாப்பிடக் காமராஜர் வீட்டுக்கு வந்துடுவார். வழக்கமா இப்படித்தான் நடந்துக்கிட்டு இருந்துச்சி. காமராஜர் வீட்டுல அவரோட பாட்டியும் இருந்தாங்க. பாட்டின்னா அவருக்கு ரொம்ப பிரியம். ஒரு நாள் பாட்டியிடம் போன காமராஜர், “இனிமே சாப்பிடுறதுக்கு மத்தியானம் வீட்டுக்கு வர மாட்டேன். எனக்குச் சாப்பாட்டைக் கட்டிக் கொடுத்துடுங்க. நான் பள்ளிக்கூடத்துலேயே சாப்பிட்டுக்கிறேன்” என்று சொன்னார்.

“பள்ளிக்கூடம் பக்கத்துல வீடு இருக்கிறதால, அப்படித் தர முடியாது, வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ”ன்னு பாட்டி கண்டிப்பா சொல்லிட்டாங்க. ஆனாலும் காமராஜர் விடுவதா இல்லை. அழுது அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டாரு. பாட்டிக்கு இன்னும் கோபம் அதிகமாயிடுச்சி. கோபத்துல காமராஜரை அடித்தும்விட்டார். அடிவாங்கினாலும்கூடக் காமராஜரோட பிடிவாதம் குறையவே இல்லை.

காமராஜரோட பிடிவாதத்தைப் பார்த்துப் பாட்டி மனமிரங்கினாங்க. தினமும் மதியச் சாப்பாட்டை டிபன் பாக்ஸில் கட்டிக் கொடுக்க ஆரம்பித்தார். இப்படியே நாட்கள் போயின. ஒரு நாள் மதியம் பாட்டி பள்ளிக்கூடத்துக்கு போனாங்க. தன்னோட பேரன் மதியச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுறான்னு ஒரு இடத்துல மறைவாக நின்னுக்கிட்டு பார்த்தாங்க.

மதிய உணவு பெல் அடிச்சவுடனேயே டிபன் பாக்ஸோடு காமராஜர் மரத்தடிக்கு வந்தாரு. அங்க கிழிந்த அழுக்குச் சட்டையுடன் ஒரு ஏழைச் சிறுவனும் வந்தான். கட்டிக்கொண்டு வந்த மதியச் சாப்பாட்டை அந்தச் சிறுவனோடு பகிர்ந்து சாப்பிட்டார் காமராஜர். இதைக் கண்டதும் பாட்டிக்கு மனம் நெகிழ்ந்துபோச்சி. இதுக்காகத்தான் பேரன் சாப்பாட்டைக் கட்டிக் கொடுக்கச் சொன்னானா, இது தெரியாம அடித்துவிட்டோமே என்று பாட்டிக்குக் கவலையாகப் போய்விட்டது.

காமராஜரோடு சாப்பாட்டைப் பகிர்ந்துகொண்ட அந்தச் சிறுவன் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தினமும் மதியானம் சாப்பிட அவனிடம் சாப்பாடு இருக்காது. பள்ளிக்கூடக் குழாயில வர்ற தண்ணீரைக் குடிச்சிட்டு பசியைத் தீர்த்துக்கொள்வான். அதைப் பார்த்துச் சின்ன வயதிலேயே காமராஜர் மனம் வருந்தினார். அவனுக்காகத்தான் வீட்டிலிருந்து அழுது, அடம்பிடிச்சி சாப்பாடு கொண்டு வருவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

பின்னாளில் தமிழக முதலமைச்சரானபோது மதிய உணவுத் திட்டத்தை அவர் கொண்டுவந்தார். அந்தத் திட்டம் கொண்டுவர, சிறு வயதில் காமராஜருக்கு நடந்த இந்தச் சம்பவமும் ஒரு காரணமாக இருந்தது என்பதை உங்களுக்குச் சொல்லவும் வேண்டுமா என்ன?

தொகுப்பு: மிது

– தி இந்து

You Might Also Like

மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் பெருமிதம்

‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வரவேற்கத்தக்கது’ – பெ.சண்முகம் ஆதரவு

தர்மஸ்தலா விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணை அவசியம்

சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் ஏற்பட்ட மதக்கலவரங்கள் – நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 37

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

TAGGED:அனுபவம்காமராஜர்குழந்தைகள்பள்ளிமதிய உணவுவாழ்க்கை
Share This Article
Facebook Email Print
Previous Article மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்
Next Article வானத்தை வசப்படுத்திய அக்னிச் சிறகு
1 Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

சிறிய கடைகளுக்கும் உரிமம்: கட்டாய சட்டத்தை திரும்ப பெற தலைவர்கள் வலியுறுத்தல்
தமிழ்நாடு
ராசியாகிவிட்டார்களா ராஜாவும் கலைவாணனும்? – திருவாரூர் திமுக பாலிடிக்ஸ்!
தமிழ்நாடு
ஆதாயக் கொலையும் மது போதை கொலையுமாக தமிழ்நாடு இருப்பது வெட்கக்கேடு: ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாடு
இபிஎஸ்ஸின் கோவை பிரச்சாரத்தில் கோட்டை விட்டதா அதிமுக? 
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?