சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தச் சங்கத்தின் மாநில தலைவர் நா.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமலாக்கத் துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அதிகார அத்துமீறலில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை, மும்மொழி கொள்கைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் அமலாக்கத் துறையின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.