தமிழ்நாட்டில் மது வணிகத்தை நடத்திவரும் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் பல்வேறு மதுபான ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்திருப்பது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வெறும் குற்றச்சாட்டுகளாக அல்லாமல், சட்டரீதியிலான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க அமலாக்கத் துறை முன்வர வேண்டிய தருணம் இது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலும் பல்வேறு மதுபான ஆலைகளிலும் அமலாக்கத் துறையினர் மார்ச் 6 முதல் 3 நாள்களுக்குச் சோதனை நடத்தினர். ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.