‘டிராகன்’ படத்தில் வரும் பேச்சிலர் அறை காட்சிகளை குறிப்பிட்டு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பிப்.21-ம் தேதி வெளியான ‘டிராகன்’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படத்தினை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இப்படத்தின் காட்சியமைப்புகள் அனைத்துமே மக்கள் மத்தியில் மிகவும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. படத்தில் வரும் பேச்சிலர் அறை காட்சிகள் தனது வாழ்க்கையில் நடந்தவை என புகைப்படங்களுடன் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.