டெல்லி ஓட்டலில் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பெண் ஒரு மாதத்துக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். முதலில் மகாராஷ்டிராவில் தங்கியிருந்த அவர், சில தினங்களுக்கு முன்பு கோவாவுக்கு சென்றுள்ளார். கடந்த செவ்வாக்கிழமை இரவு டெல்லிக்கு சென்றுள்ளார். மஹிபால்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த அவருக்கு தூய்மைப் பணியாளர் லிப்டில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை கைலாஷ் (24) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அவர் காவல் துறையில் புகார் செய்துள்ளார்.