புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி டெல்லி குடிசைவாசிகளுக்கு ரூ.3000 கொடுத்து, தேர்தல் ஆணையத்தின் மூலம் வீட்டிலேயே வாக்களிக்க வசதி செய்வதாக உறுதியளித்து தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், “இன்று டெல்லியின் குடிசைப்பகுதியில் வசிக்கும் பலரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்தக் கட்சி (பாஜக) அங்கு வீடு வீடாகச் சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் ரூ.3000 பெற்றுக்கொள்ளுங்கள், தேர்தல் ஆணையம் வீட்டிலிருந்தே வாக்களிக்க வசதி செய்யும் என்று கூறியிருக்கிறார்கள். இதனைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இது உங்களை சிக்க வைக்கும் ஒரு சதி.” என்று தெரிவித்தார்.