புதுடெல்லி: ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான முனாப் பட்டேலுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆட்டத்தின் போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான முனாப் பட்டேல் ஐபிஎல் நடத்தை விதி 2.20-ஐ மீறி செயல்பட்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் ஊதியத்தில் இருந்து அவர், 25 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.