புதுடெல்லி: டெல்லியில் பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள் 7 பேரில் முதல்வர் உட்பட 5 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தேர்தல் உரிமைகள் குறித்த அமைப்பான ஏடிஆர் எனப்படும் ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த 2025 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த சுயவிவர பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களின்படி இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் ஆய்வின்படி, டெல்லியில் இன்று பதவியேற்ற 7 அமைச்சர்களில் முதல்வர் உட்பட ஐந்து பேர் (71%) தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அமைச்சர்களில் ஒருவரான ஆஷிஷ் சூட் தீவிரமான குற்ற வழக்குகளை எதிர்கொள்கிறார்.