புதுடெல்லி: பிற்பகல் 3 மணி நிலவரப்படி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு 46.55%-ஐ எட்டியுள்ளது. அதிகபட்சமாக முஸ்தபாபாத்தில் 56.12% வாக்குகள் பதிவாகியுள்ளன.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 46.55%-ஐ எட்டியுள்ளதாக டெல்லி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக முஸ்தபாபாத்தில் 56.12% வாக்குகளும், கரோல் பாக் சட்டமன்றத் தொகுதியில் மிகக் குறைந்த அளவாக 39.05% வாக்குகளும் பதிவாகியுள்ளன.