திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வத்தலகுண்டு அருகே நான்கு வழிச்சாலை பணி முழுமையாக நிறைவு பெறாமல் சுங்கச்சாவடியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், விவசாயிகள் இணைந்து டோல்கேட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர். சுங்கச்சாவடியை சூறையாடியதாக அடையாளம் தெரியாத 300 பேர் என குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
The post டோல்கேட் சூறை – பொதுமக்கள், விவசாயிகள் 300 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.