சேலம்: சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சேலம் மாவட்டத்தில் உள்ள தங்க நகை கைவினைஞர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டு தடுமாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பங்குச் சந்தையில் முதலீடு செய்து வரும் பெரும் தொழில் அதிபர்கள், சமீபகாலமாக தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கியுள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், தங்க நகை தொழில் செய்து வரும் கைவினைஞர்கள், தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவாய் இழப்பு ஏற்பட்டு வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் சேலம் மாநகர தலைவர் மணிகண்டன் கூறியது: சேலம் மாவட்டத்தில் இரண்டாவது அக்ரஹாரம், செவ்வாய்ப்பேட்டை, குகை உள்பட பல்வேறு பகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்க நகை செய்யும் தொழிலி்ல் ஈடுபட்டுள்ளனர். பரம்பரையாக தங்க நகை தொழிலில் ஈடுபட்டு வரும் கைவினைஞர்களுக்கு இத்தொழிலை தவிர மாற்றுத் தொழில் தெரியாது. இதனால், தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டே,