எருசலேம்: தங்கள் நாட்டின் மீது ஈரானில் தாக்குதல் தொடர்வதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகும் என டிரம்ப் அறிவித்திருந்தார். இஸ்ரேலும் ஈரானும் தற்போது வரை மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்ட ஒரு மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழித்து வருவதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தங்கள் நாட்டின் மீது ஈரானில் தாக்குதல் தொடர்கிறது: இஸ்ரேல் ராணுவம் தகவல் appeared first on Dinakaran.