தமிழக மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசுக்கு மனமில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரும்பு டன்னுக்கு ரூ.4,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான அறிவிப்பு, தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் இல்லை. எனினும், மானியக் கோரிக்கையின்போது நிறைவேற வாய்ப்புள்ளது. தமிழக முதல்வரும், துறை அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து, அவற்றை நிறைவேற்ற வேண்டுகோள் விடுக்கிறேன். அதேபோல, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பரிசீலிக்க வேண்டும்.