சென்னை: தமிழ்நாடு கால்பந்து சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய தலைவராக சண்முகம் தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் கடந்த மாதம் 31-ம் தேதி காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததை தொடர்ந்து தற்போது மறு தேர்தல் நடைபெற்றது.