சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் (MUDP) மற்றும் தமிழ்நாடு புறநகர வளர்ச்சி திட்டம் (TNUDP) ஆகிய திட்டங்களின் மூலம் மனைக்களுக்கான ஒதுக்கீடு பெற்று கிரையப்பத்திரம் பெறுவதற்காகவும் மற்றும் கிரையப்பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் பட்டா பெறுவதற்காக வருவாய்த் துறையுடன் இணைந்து வாரியத்தால் இரண்டாம் கட்டமாக 1.3.2025 முதல் 8.3.2025 வரை காலை 10.30 முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த சிறப்பு முகாம்களில் தவறாது கலந்துக்கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாதவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், சத்யா நகர் , விருகம்பாக்கம், கொளத்தூர், கங்கை அம்மன் கோயில், கண்ணகி நகர், டாக்டர் அம்பேத்கர் நகர், விருகம்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர், மயிலாபூர், ஆர்.கே.நகர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுகிறது.
The post தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சென்னையின் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.