‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் விருதுநகரில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டபோது அவரை அண்ணா சந்தித்தது குறித்து உணர்ச்சிப் பிழம்பாகக் கடித வடிவில் ‘தம்பிக்குக் கடிதம்’ எழுதியுள்ளார்.
“கடை வீதியையொட்டி உள்ள மாரியம்மன் கோவில் திடல். நானும் அங்கு நின்று பேசியிருக்கிறேன். அந்தத் திடலில் வீரமும் தியாகமும் ஒருவராகி சங்கரலிங்கனார் ஆகக் காட்சி தரும் என்று யார் எண்ணியிருக்க முடியும்?அந்தத் திடலில் ஒரு சிறு ஓலைக் கொத்துக் குடில் அமைத்துக் கொண்டு ஒரு கயிற்றுக் கட்டிலின் மீது அவர் படுத்துக் கொண்டிருக்கக் கண்டேன்.