டெல்லி : தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72ல் இருந்து 90 ஆக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை , தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருவதுடன் சாலைகளை பயன்படுத்துவோரிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள 72 சுங்கச் சாவடிகள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 26,000 கோடியை சுங்கக் கட்டணமாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வசூலித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கிமீ நீளமுள்ள 4 வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவு பெறும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் மேலும் 18 சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72ல் இருந்து 90 ஆக உயர்த்த ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.