சென்னை: தமிழ்நாட்டில் மார்ச் 11ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், திருவாருர் ஆகிய மாவட்டங்களில் மார்ச் 11-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் 4 மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
The post தமிழ்நாட்டில் மார்ச் 11ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.