புதுடெல்லி: புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரும், தேர்தல் ஆணையராக விவேக் ஜோஷியும் இன்று (பிப்.19) பொறுப்பேற்றனர்.
தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜிவ் குமார் நேற்று (பிப். 18) ஓய்வு பெற்றதை அடுத்து, தேர்தல் ஆணையராக இருந்து வந்த ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக இன்று பொறுப்பேற்றார். புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட விவேக் ஜோஷியும் இன்று பொறுப்பேற்றார்.