திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, கடந்த வெள்ளிக்கிழமை சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் கே.ஜி.கண்டிகை பேருந்து நிலையம் அருகில் திருத்தணி நோக்கி வந்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது எதிர் திசையில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி அதிவேகமாக பேருந்து மீது மோதிய விபத்தில் அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். பெண்கள், சிறுவர்கள் உள்பட 30 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை பொதுமக்கள் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கை, கால் துண்டிக்கப்பட்டு படுகாயமடைந்தவர்கள் திருவள்ளூர், சென்னை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கால்கள் துண்டிக்கப்பட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்பவரின் மகன் அரசு (21) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதன்மூலம் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இது கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
The post திருத்தணி விபத்தில் சிகிச்சை பெற்ற வாலிபர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு appeared first on Dinakaran.