மதுரை: திருப்பரங்குன்றத்தில் பொது அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் பழனியாண்டவர் கோயில் தெருவில் டிச. 4-ம் தேதி மலை மீதுள்ள தர்காவில் கந்தூரி செய்பவர்களுக்கு அனைத்து வசதியும் உள்ளன என்று புதிதாக அறிவிப்பு பலகை தர்கா மேனேஜிங் டிரஸ்டியினரால் வைக்கப்பட்டுள்ளதாக கோயில் மூலம் திருப்பரங்குன்றம் போலீஸில் புகார் அளித்ததன்படி அந்த வாசகம் நீக்கப்பட்டது.