மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம், கோஷமிட்ட சுமார் 900க்கும் மேற்பட்ட இந்து முன்னணி, இந்து அமைப்பினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் மாவட்ட நிர்வாகமும் விதித்த 144 தடை உத்தரவால் போராட்டம் தடுக்கப்பட்டது.