மதுரை: திருப்பரங்குன்றம் பகுதியில் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை வலியுறுத்தி திருமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்ததற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டு இருந்தது. 144 தடை உத்தரவு காரணமாக பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்வதை தடுக்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
The post திருமங்கலத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க இயலாது: ஐகோர்ட் கிளையில் அரசு வாதம் appeared first on Dinakaran.