புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்திய போது, திருமணங்களில் வீடியோ எடுக்க பயன்படும் ட்ரோன்கள், பயனற்ற ஆயுதங்கள், திறனற்ற ஏவுகணைகளை இந்தியா மீது பாகிஸ்தான் ஏவியதாக சமூக வலைதளங்களும் உருது நாளிதழ்களும் விமர்சனம் செய்துள்ளன.
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய போது, பாகிஸ்தான் பதிலுக்கு ஏவிய திறனற்ற ஏவுகணைகள் இலக்கை தாக்குவதற்கு முன்பாகவே வெடித்து சிதறியுள்ளன. இதுபோல், பயனற்ற ஆயுதங்களை வைத்து இந்தியாவுடன் திறமையாகப் போர் புரிவதாக நாட்டு மக்களை பாகிஸ்தான் ஏமாற்றி சமாளித்ததாக உருது நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.