நான்கு முதல் ஐந்து கதைகளை இணைக்கும் ஆந்தாலஜி திரைப்படங்கள் ஒரு வகை. அதுவே நான்கு கதாநாயகர்களை இணைக்கும் ஒரு கதையில் ஒரு ஆந்தாலஜிக்குரிய சுவாரசியத்தைக் கொண்டுவர முடியுமா? அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்tது இயக்கியிருக்கும் ஸ்ரீநாத்.
தெருத்தெருவாகப் போய் சவரி முடி வியாபாரம் செய்கிறார் மணிகண்டன். கருணாகரன் கிளி ஜோதிடம் பார்ப்பவர். ரமேஷ் திலக் பலகுரல் கலைஞர். ஸ்ரீநாத் பேய் விரட்டும் தொழில் செய்பவர். செய்யும் தொழிலில் போதிய வருமானம் இல்லாமல் இந்த நான்குபேருமே கஷ்டப்படுகிறார்கள். இந்த நான்கு பேரும் ஒருவரை ஒருவர் முன்பின் அறிந்திராதவர்கள்.