கோவை: ‘சுவெச் சர்வெக்‌ஷான்’ தரவரிசைப் பட்டியல் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில், தேசிய அளவில் 28-வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் கோவை மாநகராட்சி பிடித்துள்ளது.
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் சார்பில், கடந்த 2014-ம் ஆண்டு ‘தூய்மை பாரதம்’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உள்ளாட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது தொடர்பான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.