தெலங்கானாவில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகன், மகள் என 3 பேர் உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், மேச்சராஜுபல்லி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (33). இவர், தனது மனைவி கிருஷ்ணவேணி, மகள் சைத்ரசாய் (5), மகன் ஆர்யவர்த்தன் (2) ஆகியோருடன் காரில் ஹனுமகொண்டாவில் நடந்த உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். பிறகு காரில் சொந்த ஊருக்கு நேற்று திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, காரை ஓட்டி வந்த பிரவீனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவர் காரை திருப்பி அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல முயன்றுள்ளார். எனினும் அவருக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதில், கார் சாலையின் ஓரத்தில் இருந்த எஸ்ஆர்எஸ்பி கால்வாயில் விழுந்தது.