தேசிய கல்விக் கொள்கையில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படவில்லை என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் கல்வி தேவைகளை எட்டுவதற்கான விரிவான திட்டங்களுடன் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எந்த இடத்திலும் இந்தியை கட்டாய பாடமாக்கவில்லை. அரசியல் சட்டத்தில் இடப்பட்டுள்ள ஏதாவது ஒரு இந்திய மொழியை 3-வது மொழியாக கற்பிக்க பரிந்துரை செய்கிறது. அதனால், தமிழக அரசு திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் ஒன்றை மாணவர்களுக்கு கற்பிக்கலாம். மேலும், மும்மொழித் திட்டமானது பிற மொழிகளை கற்பதற்கு நல்ல வாய்ப்பாகவும் அமையும்.