திருப்பத்தூர்: தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் .1ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக கே.சி.வீரமணி மீது குற்றச்சாட்டு எழுந்தது. பொய்யான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததன் அடிப்படையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் புகாரில் ஆணையம் வழக்கு தொடர்ந்தது.
புகாரை விசாரித்து கே.சி.வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில் கே.சி.வீரமணி, பிரமாணப் பத்திரத்தில் சொத்துகளை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரமாணப் பத்திரத்தில் ஏராளமான சொத்துகளை மறைத்திருப்பதை கண்டுபிடித்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் .1ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் ஏப்.1ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக திருப்பத்தூர் நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.