பெங்களூரு: தொகுதி மறுவரையறை தொடர்பாக அமித் ஷா அளித்துள்ள வாக்குறுதி நம்பகத்தன்மையற்றது, தவறாக வழிநடத்தக் கூடியது என கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
கோவையில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார். விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும், தென்னிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டில் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார். திமுக முதல்வர் தவறான தகவல்களை தெரிவித்து மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார் என குறிப்பிட்டிருந்தார்.