திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம், மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், அரியலூர் மாவட்டம் தா.பழூர், ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை, திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருப்பூர் மாவட்டம் காங்கயம், தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டி மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.152 கோடியில் செலவில் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு கூடுதலாக 1,308 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுவர்.
கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் தொழிற்கல்வி பெறும் வகையில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், கோவை மாவட்டம் பேரூர் மற்றும் தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஆகிய இடங்களில் விடுதி வசதிகளுடன் 7 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.148 கோடியில் தொடங்கப்படும் இதனால் ஆண்டுக்கு கூடுதலாக 1,370 மாணவ, மாணவிகள் பயிற்சி பெறுவர்.