புதுடெல்லி: 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டானது, நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வை அதிகரிக்கும் என்று அசோசேம் பாராட்டு தெரிவித்துள்ளது.
வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் (அசோசேம்) தலைவர் சஞ்சய் நாயர் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தைரியமான ஒரு முடிவெடுத்து பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் அறிவிப்புகளால் நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வு அதிகரிக்கும். இதனால் வளர்ச்சிக்கு வழி ஏற்படும்.