சென்னை: நகைக்கடன் மீதான கட்டுப்பாடுகளை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யவும், விவசாயிகள் தங்கள் தொழிலை மேற்கொள்ளவும், கிராமப்புற மேம்பாட்டுக்கும் இன்றியமையாததாக விளங்குவது நகைக்கடன். இதை பெறுவதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பாரத ரிசர்வ் வங்கி வகுத்திருப்பது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.