மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் அறிக்கை வெளியானதை அடுத்து சில நடிகைகள் வெளிப்படையாக பாலியல் புகார்களைக் கூறினர்.
கேரள மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த நடிகை ஒருவர், நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் உள்ளிட்ட சிலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த வழக்கில் முகேஷை விசாரித்த மராடு போலீஸார் பின்னர் அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.