நீலகிரி மாவட்டத்தில் கொடி கட்டி பறந்து வந்த தைலம் காய்ச்சும் தொழில் நலிவடைந்து வருவதால், அதை சார்ந்துள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் திரும்பும் போது வர்க்கி மற்றும் நீலகிரி தைலத்தை தங்கள் நினைவுகளோடு திரும்ப கொண்டு செல்கின்றனர். தலைவலியிலிருந்து நிவாரணம் பெற பயன்படுத்தும் நீலகிரி தைலம் என்று அழைக்கப்படும் யூகலிப்டஸ் தைலத்தின் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், எதிர்காலத்தில் நீலகிரி தைலம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எங்கு நோக்கினும் சதுப்பு நிலங்களும், மலை காடுகளையொட்டிய பகுதிகளில் சோலைக் காடுகளுமே நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக இருந்தது.