அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ். இந்த ஆட்டத்துக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது:
“ஸ்ரேயஸ் ஐயர் அபாரமாக பேட் செய்தார். அவர் ஆடிய சில ஷாட்கள் சிறப்பாக இருந்தது. பஞ்சாப் அணி சிறப்பாக பேட் செய்தது. இந்த இலக்கு எட்டக்கூடியது என்றாலும் நாங்கள் சிறப்பாக பந்து வீசி இருக்க வேண்டும். இது மாதிரியான பெரிய ஆட்டங்களில் பந்து வீச்சு யூனிட் அதை செய்திருக்க வேண்டும்.