கொல்கத்தா: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலம் ஏராளமானோரிடம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறித்த கும்பலை சேர்ந்த பெண் உட்பட 9 பேருக்கு, நாட்டிலேயே முதல்முறையாக மேற்கு வங்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
சமீபகாலமாக, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. வீடியோ அழைப்பில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் தங்களை அரசு உயர் அதிகாரிகள் என்று அறிமுகம் செய்துகொள்வார்கள். “உங்கள் பெயரில் போதை பொருள் கடத்தப்பட்டுள்ளதால், டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளீர்கள். இதில் இருந்து தப்ப வேண்டுமானால், நாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றுங்கள்” என்று கூறுவார்கள்.