கடந்த 4 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இடைத்தேர்தலை சந்திக்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி. கடந்த முறை திருவிழா கோலத்தில் இருந்த இத்தொகுதி, இம்முறை பலமான போட்டியாளர்கள் இல்லாததால் களையிழந்து கிடக்கிறது. இருந்த போதும் ஆளும் கட்சிக்கே உரித்தான பதைபதைப்புடன் வீடுவீடாக வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார். வாக்குச் சேகரிப்புக்கு நடுவே ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த மினி பேட்டி இது.
இது நீங்கள் ஏற்கெனவே வெற்றிபெற்ற தொகுதி. இப்போது களம் எப்படி உள்ளது?