புதுடெல்லி: நாடு முழுவதும் ரயில்களில் பயணிகள் நிரம்பி வழியும் விவகாரம் குறித்து மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரிவான பதிலளித்துள்ளார்.
இது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி புதன்கிழமை எழுப்பியக் கேள்வி: “நம் நாட்டில் ரயில்களில் பயணிக்கும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பது குறித்து அரசுக்குத் தெரியுமா? அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் பிரச்சினையைத் தீர்க்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? முக்கிய ரயில்களில் முன்பதிவில்லாத பொது மற்றும் படுக்கை பெட்டிகளின் எண்ணிக்கையை அரசு குறைத்துள்ளதா?” எனக் கேட்டிருந்தார்.