நெல்லை: நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் வாதாடிக் கொண்டிருந்த வக்கீல், திடீரென மாரடைப்பால் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் உயிரிழந்தார். நெல்லை தச்சநல்லூர், மேலக்கரையைச் சேர்ந்தவர் தங்கராஜ் (40). வக்கீலான இவர் நேற்று முன்தினம் நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் வாதாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். சக வக்கீல்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். டாக்டர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
The post நீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல் மாரடைப்பால் உயிரிழப்பு appeared first on Dinakaran.