இந்திய பங்குச் சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, தொடர்ந்து 5 மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இது இந்திய பங்குச் சந்தையில் ‘எப் அண்டு ஓ’ வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட பின், இதுவரை இல்லாத நெருக்கடியாக கருதப்படுகிறது.
பங்குச் சந்தை வர்த்தகத்தில் பங்குகளின் விலை ஏறுவதும், இறங்குவதும் வாடிக்கையான நடைமுறையாக இருந்தாலும், தொடர்ந்து இறங்கிக் கொண்டே இருப்பது பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கும் என்பதால் இதுகுறித்து மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே நிபுணர்களின் எச்சரிக்கையாக ஒலிக்கிறது.