திருப்பத்தூர்: “பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை மத்திய அரசை விட தமிழக அரசு கட்டுப்படுத்தியதை பாராட்டுகிறேன்” என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக அரசின் நிதி மேலாண்மையை பாராட்டுகிறேன். முதலீடுகள் செய்வது மட்டும் முக்கியமல்ல. சாலை போன்ற திட்டங்களை நிறைவேற்றும்போது, தரத்தையும் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். தமிழக அரசின் மொத்த கடன் ரூ.9.30 லட்சம் கோடி. இது மொத்த உற்பத்தியில் 3 சதவீதம். நிதி பற்றாக்குறையை 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தியது பாராட்டுக்குறையது.