சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் நேற்று முக்கிய சந்தைகளில் விற்பனை களைகட்டியது. விநாயகர் சிலை மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர். விடுமுறையையொட்டி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி, சென்னையின் கோயம்பேடு, பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகள் காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. அதேநேரம், பொருட்கள் மற்றும் பூக்களின் விலையும் வழக்கத்தை விட அதிகரித்திருந்தது.