ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர் கூறுகையில், “தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். சுற்றுலா பயணிகளை இந்துக்களா என்று கேட்டு, பிறகு சுட்டுக் கொன்ற விதம், கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் சதி செய்து, பாதுகாப்பற்ற மக்களைத் தாக்கிய விதம், அரசியல் எல்லைகளை கடந்து அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.
ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபல் கூறுகையில், “இது நாட்டின் ஒற்றுமை மீதான தாக்குதல் ஆகும். அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, இதனை கண்டிக்க வேண்டும். இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர்களை தண்டிக்க அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.