புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் 1960-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை புதன்கிழமை அன்று ரத்து செய்துள்ளது இந்தியா. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே பாராட்டி உள்ளார்.
“நோபல் பரிசு பெறுவதற்காக 1960-ல் பாம்புக்கு நீர் கொடுத்தார் நேரு. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் ஹீரோ அவர். பல்வேறு ஆறுகளின் நீரை அவர் பாகிஸ்தானுக்கு வழங்கினார்.