புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு உள்நாட்டு கலகம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், இந்தியாவுடனான போர் பதற்றம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
அப்போது இந்த விவகாரத்தில் ராணுவத்தின் செயல்பாட்டுக்கு ஆதரவு அளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இது அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனிருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு பிரசங்கத்தின்போது, பிரபல தியோபண்டி மதகுரு மவுலானா அப்துல் அஜீஸ் காசி, “இந்தியாவுடன் போர் தொடுக்க வேண்டுமா என்பதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார். ஆனால் ஒருவர் கூட கையை உயர்த்தவில்லை.