அமிர்தசரஸ்: பாகிஸ்தான் நாட்டில் சிறையில் இருந்த 22 இந்திய மீனவர்கள், சனிக்கிழமை (பிப்.22) அட்டாரி-வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினர்.
பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்த காரணத்துக்காக அந்த நாட்டு பாதுகாப்பு படை பிரிவினர் இந்தியர்கள் 22 பேரை கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கைது செய்தது. இவர்கள் அனைவரும் குஜராத் (18), உத்தர பிரதேசம் (1) மற்றும் டையூ (3) ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.